என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மாணவியின் கர்ப்பம் கலைப்பு
நீங்கள் தேடியது "மாணவியின் கர்ப்பம் கலைப்பு"
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 10-ம் வகுப்பு மாணவியின் கர்ப்பத்தை கலைத்தது தொடர்பாக காதலன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அரசன். இவரது மகன்கள் ராஜா (வயது 21), பரமசிவம் (21). இவர்கள் இருவரும் இரட்டையர்கள் ஆவர்.
ராஜா லாரி டிரைவாக வேலை பார்த்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்தார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார்.
இது பற்றி மாணவி வீட்டில் தெரிவிக்காமல் மறைத்து வந்தார். 4 மாதம் கழித்து மாணவியின் வயிறு பெரியதாக மாறியதை தொடர்ந்து சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் இது பற்றி கேட்டனர். அப்போது அவர், தன்னை லாரி டிரைவர் ராஜா பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். அதனால் நான் கர்ப்பம் அடைந்தேன் என்று கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவருக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். கடந்த ஜூலை மாதம் 30-ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதையறிந்த சேலம் மாவட்ட குழந்தை திருமண தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி, மாணவிக்கு இன்னும் திருமண வயது ஆகவில்லை. அதற்கு முன்பு திருமணம் செய்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் ராஜா அந்த மாணவியின் கர்ப்பத்தை கலைக்க மாத்திரை வாங்கி கொடுத்தார். இதற்கு ராஜாவின் குடும்பத்தினர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
மாத்திரையை சாப்பிட்டதும் மாணவியின் கர்ப்பம் கலைந்தது. இதையடுத்து அவரை திருமணம் செய்ய ராஜா மறுத்து விட்டார்.
இது குறித்து கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரில் மகளின் வாழ்க்கையை சீரழித்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கூறியிருந்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் சகோதரர் பரமசிவம், இவரது நண்பர் சேவியர் என்கிற வேலுசாமி (28) ஆகியோரை கைது செய்தனர். ராஜா மற்றும் அவரது தாய் லட்சுமி(47), தாய் மாமன் ராமர் (41) ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
இதில் ராமர் கெங்கவல்லி அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக உள்ளார். இவர்கள் 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள 3 பேரையும் கண்டுபிடிக்கும் பணியில் தனிப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அரசன். இவரது மகன்கள் ராஜா (வயது 21), பரமசிவம் (21). இவர்கள் இருவரும் இரட்டையர்கள் ஆவர்.
ராஜா லாரி டிரைவாக வேலை பார்த்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்தார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார்.
இது பற்றி மாணவி வீட்டில் தெரிவிக்காமல் மறைத்து வந்தார். 4 மாதம் கழித்து மாணவியின் வயிறு பெரியதாக மாறியதை தொடர்ந்து சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் இது பற்றி கேட்டனர். அப்போது அவர், தன்னை லாரி டிரைவர் ராஜா பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். அதனால் நான் கர்ப்பம் அடைந்தேன் என்று கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவருக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். கடந்த ஜூலை மாதம் 30-ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதையறிந்த சேலம் மாவட்ட குழந்தை திருமண தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி, மாணவிக்கு இன்னும் திருமண வயது ஆகவில்லை. அதற்கு முன்பு திருமணம் செய்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் ராஜா அந்த மாணவியின் கர்ப்பத்தை கலைக்க மாத்திரை வாங்கி கொடுத்தார். இதற்கு ராஜாவின் குடும்பத்தினர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
மாத்திரையை சாப்பிட்டதும் மாணவியின் கர்ப்பம் கலைந்தது. இதையடுத்து அவரை திருமணம் செய்ய ராஜா மறுத்து விட்டார்.
இது குறித்து கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரில் மகளின் வாழ்க்கையை சீரழித்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கூறியிருந்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் சகோதரர் பரமசிவம், இவரது நண்பர் சேவியர் என்கிற வேலுசாமி (28) ஆகியோரை கைது செய்தனர். ராஜா மற்றும் அவரது தாய் லட்சுமி(47), தாய் மாமன் ராமர் (41) ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
இதில் ராமர் கெங்கவல்லி அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக உள்ளார். இவர்கள் 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள 3 பேரையும் கண்டுபிடிக்கும் பணியில் தனிப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X